நல்வரவு…

“தேவதை..”
கேட்ட மாத்திரத்தில் நம்மில் சிலரை நம் குழந்தை பருவத்திற்கும், பலரை தங்கள் காதல் காலங்களுக்கும் தூக்கிச் செல்லும் மந்திரச்சொல்…

விரல் சூப்பியும், விரல் பற்றியும் நடந்த காலங்களில் சொல்லப்பட்ட சில கதைகளின் வாயிலாய் என் மனம் என்னும் மந்திர ஜாடிக்குள் புகுந்து விட்ட ஒரு அற்புத அருவம் தான் “தேவதை..!!”

என் மனதிற்குள் அமர்ந்துகொண்டு எனக்கும் உங்களுக்கும் அவள் சொல்லும் தூதுகளைக் கொண்டு சேர்க்கும் தூதுவனாய் மட்டும் இந்த தேவதைத்தோழன்…

தூதுகள் பிடித்திருந்தால் வாழ்த்துமடல் தாருங்கள்…
பிடிக்காவிட்டால் வசவுமழை தூருங்கள்…

மழைகளில் நான் நனைந்துகொண்டு, மடல்களை மட்டும் தேவதையிடம் சேர்க்கிறேன்….

தூதுகளை சேர்க்கும் பணியில்….
தேவதைத்தோழன்…
(நேசிக்க வாழ்பவன்… வாழ்வை நேசிப்பவன்…!!!)

2 comments

I love comments